சேலம் மாவட்டத்தில் உள்ள ஜங்ஷன் செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைத்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது கையில் ஈஸ்வரி, டி.தனபால் என பச்சை குத்தப்பட்டு இருந்தது. அந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்