புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லம்பக்காடு கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். பா.ஜ.க பிரமுகரான பழனியப்பன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் திமுகவினர் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விமலாதி ராஜன் தலைமையில் தி.மு.க-வினர் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பழனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.