புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லம்பக்காடு கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். பா.ஜ.க பிரமுகரான பழனியப்பன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் திமுகவினர் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விமலாதி ராஜன் தலைமையில் தி.மு.க-வினர் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பழனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகநூலில் அவதூறு கருத்து…. பா.ஜ.க பிரமுகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read moreஅதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…
Read more