ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை சோளிங்கர் ரோட்டில் மோகனகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கந்தன் என்ற மகன் உள்ளார். கந்தனுக்கு அகமத் நர்கீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.

அப்போது கோபத்தில் கந்தன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தினார். இதுகுறித்து அகமத் நர்கீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கந்தனை கைது செய்தனர்.