மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ்(41) என்ற மகன் இருக்கிறார். மீன் வியாபாரியான செல்வராஜ் வியாபாரம் செய்வதற்காக நேற்று அதிகாலை காரில் மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பசுமலை மெயின் ரோட்டில் இருக்கும் பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி காருக்கு கியாஸ் நிரப்பி காரை ஓட்டி புறப்பட தயாரானார். அப்போது கார் இயங்கவில்லை.

இந்நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக டீசல், பெட்ரோல் போடுவதற்கு அடுத்தடுத்து வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.