ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் விடுதியில் படிக்கும் ஒரு மாணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்ததும் அதே ஆம்புலன்ஸ்சில் விடுதிக்கு புறப்பட்டனர்,

அப்போது ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதிர்ஷ்டவசமாக ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆம்புலன்ஸில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.