கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை சேர்ந்த 20 பள்ளி மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குர்கில் நடைபெற்ற தென்னிந்தியாவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சிலம்பம் போட்டியில் ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றனர். இதனையடுத்து தங்கப்பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.