பொங்கலையொட்டி வருடம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். வீரத்தின் அடையாளமாக கருதப்படும் இந்த விளையாட்டில் இளைஞர்கள் பெரியவர்கள் என பலர் பங்கேற்பார்கள்.

இந்த வருடத்திற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி பகுதியில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுகந்த் என்ற இளைஞர் 12 காளைகளை அடக்கியுள்ளார்.

இதன் மூலம் அதிக காளைகளை அடக்கியதாக கூறி சுகந்துக்கு முதல் பரிசான பல்சர் பைக் வழங்கப்பட்டுள்ளது. சுகந்த் முதல்முறையாக முதல் பரிசை வாங்குவதாக தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்.