தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி பைபாஸ் ரோட்டில் தனியார் வங்கி அமைந்துள்ளது. நேற்று காலை இந்த வங்கியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் லாக்கர் ரூமில் இருந்த குளிர்பதன பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்து வங்கி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனை பார்த்ததும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வங்கியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் லாக்கரில் இருந்த ஆவணங்கள், நகைகள் தப்பியது. வெளியே இருந்த ஒரு சில ஆவணங்கள் மட்டும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.