விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய பேராலி பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சாந்தி மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வடிவேலின் மனைவி உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து சாந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.