விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் சுப்புராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் வேல்ராஜ் என்பவரும் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் பந்தல்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் உடையநாதபுரம் விலக்கில் வைத்து சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்புராஜ், வேல்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.