புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கே.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் கிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

அவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கிருஷ்ணன், முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.