கடலூர் மாவட்டத்தில் உள்ள புலவன் குப்பத்தில் கோவிந்தராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கோவிந்தராஜ் அவரது மனைவி ஜெயசுதாவும் முத்தாண்டிகுப்பம் கடைவீதியில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது சிவகுமாரும், அவரது மனைவி செந்தமிழ் செல்வியும் கோவிந்தராசு, மற்றும் ஜெயசுதாவை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிவக்குமார், செந்தமிழ் செல்வி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.