தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மசக்கல் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில் மடுவு வனப்பகுதியில் கையில் வலையுடன் என்ற ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பது தெரியவந்தது. பழனிசாமி முயலை வேட்டையாட சென்றுள்ளார்.

அவரை வனத்துறையினர் கைது செய்து வலையை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அத்துமீறி காட்டுப்பகுதியில் நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக பழனிச்சாமிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.