தர்மபுரி மாவட்டத்திலுள்ள மஞ்சநாயக்கன் அள்ளி 5-வது மைல் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இவர் தனது பெட்டிக்கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிக்கடையில் சோதனை நடத்திய போது குட்கா பதுக்கி வைத்திருந்தது உறுதியானது. இதனால் சந்திராவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.