விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவில் முகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இதனையடுத்து சிலிண்டர் வெடித்து தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.