நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 13 வயது சிறுவனை மலர் அங்காடியில் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் சிறுவனை மீட்டு குன்னூர் ஜூடிசியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து சிறுவனை பணியில் அமர்த்திய உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் உதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதேபோல் பிரபல ஹோட்டலில் 16 வயது சிறுவனை பணியில் அமர்த்தியதற்காக ஹோட்டல் உரிமையாளருக்கும் 20 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.