விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குயவன்காடுவெட்டி கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் தென்பெண்ணையாற்று பகுதிக்கு சென்று குளித்துவிட்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது அருளவாடி காலனியைச் சேர்ந்த சத்யராஜ் தரப்பினர் அய்யனார் தரப்பினரை பார்த்து கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனை அய்யனார் தட்டி கேட்ட போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். இதனால் அய்யனாரின் நண்பர்களான எத்திராஜ், விமல்ராஜ், சத்யராஜ் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் இரு தரப்பைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.