கோயம்புத்தூர் மாவட்டத்தில் 29 வயதுடைய மருத்துவ பிரதிநிதி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறார். நேற்று முன்தினம் மாலை நேரம் மருத்துவ பிரதிநிதியின் 2 வயது மகள் நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்தாள். இதனை பார்த்த தாய் குழந்தையிடம் பசிக்கிறதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா? என்ன கேட்டார். அதற்கு அந்த குழந்தை இல்லை என தலையை ஆட்டி உள்ளது. இதனையடுத்து தாய் தனது குழந்தையை பரிசோதனை செய்தபோது உடலில் காயம் இருந்தது தெரியவந்தது. இதனால் தனது குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால்தான் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் சிறுமி மற்றும் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தினார். அப்போது தந்தையே தனது இரண்டு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் மருத்துவ பிரதிநிதியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்போதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.