கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் இன்ஜினியரான சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து சாமிநாதன் டெலிகிராம் குரூப்பில் இணைந்தார்.

பின்னர் சாமிநாதனை தொடர்பு கொண்டு பேசிய பெண் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி பல்வேறு தவணைகளாக சாமிநாதன் 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பினார். ஆனால் அவருக்கு கமிஷன் தொகை கிடைக்கவில்லை. பணமும் திரும்ப வரவில்லை. இதுகுறித்து சாமிநாதன் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.