கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஈச்சம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ரூபன் குமார் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் ரூபன் குமாரை போலீசார் கைது செய்தனர்.