கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தெய்வ கணேசன் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று விடுமுறையில் தெய்வ கணேசன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் ஆதனூர் கிராமத்தில் இருக்கும் மாமியார் வீட்டில் உள்ள மனைவியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் தெய்வ கணேசன் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் ஆனைவாரி பகுதியில் சென்ற போது சாலை விரிவாக்க பணிக்காக கொட்டப்பட்டிருந்த செம்மண் மேட்டில் தெய்வ கணேசன் எதிர்பாராதவிதமாக விழுந்தார். இதனால் படுகாயமடைந்த  தெய்வ கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தெய்வ கணேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய வைத்தனர். இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.