சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணம்மாபேட்டை பகுதியில் 10 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்நிலையில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி சிறுவனை கடத்தி சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ஏழுமலையை பிடிக்க முயன்றனர். இதனால் சிறுவனை விட்டுவிட்டு ஏழுமலை தப்பி சென்றார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தியதில் பிச்சை எடுக்க வைக்கும் நோக்கத்தில் ஏழுமலை சிறுவனை கடத்த முயன்றது தெரியவந்தது. இந்த வழக்கு செசன்ஸ் மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஏழுமலைக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.