திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரண்டாவதாக பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பவித்திராவிற்கும் இது இரண்டாவது திருமணம். இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்து சில நாட்களாக இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மணிகண்டன் வீட்டிலிருந்த அருவாளால் பவித்ராவின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.