சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி தாலுகாவில் 56 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு இவர் 6 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை போக்சோ சட்டத்தின் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.