சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அடுத்த டோல்கேட்டில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தின் ஓட்டுனர் பெண் பயணிகளை ஏற்றாமல் சென்றுள்ளார். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் அரசு பேருந்து டிரைவர் கண்ணன், கண்டக்டர் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதனை தொடர்ந்து அரசு பேருந்து டிரைவர்கள் தரப்பில் கூறியதாவது, செல்லியம்மன் நகர் பேருந்து நிறுத்தத்திற்கும் டோல்கேட்டுக்கும் இடையே 200 மீட்டர் தூரம்தான் இருக்கிறது. அந்த டோல்கேட்டில் பேருந்து நிறுத்தம் கிடையாது. எனவே அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.