விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இவருடைய 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் சமத்துவ மாரத்தான் போட்டி நடத்தப்பட இருக்கிறது. இதற்கான டி-ஷர்ட் வழங்குதல் மற்றும் இணையதள பதிவு போன்ற நிகழ்ச்சியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தொல். திருமாவளவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் தொல். திருமாவளவன் பேசினார். அவர் பேசியதாவது, விமானத்தில் என்னுடன் பயணம் செய்த ஒருவர் நீங்கள் தமிழ்நாடா என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் ஆமாம் என்று கூறினேன்.

அதன் பிறகு நீங்கள் எதற்காக தமிழ்நாட்டில் இந்து கோவில்களை இடிக்கிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் ஏன் உடைக்கப் போகிறோம் என்றேன். அதற்கு அவர் திமுக அரசு இந்துக்களுக்கு எதிரானது என்றும் நிறைய கோவில்கள் தமிழ்நாட்டில் இடிக்கப்படுவதாகவும் நிறைய செய்திகள் பகிரப்பட்டு வருவதாக கூறினார். நான் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று அவரிடம் தெரிவித்தேன். நான் யார் என்பது அந்த நபருக்கு தெரியவில்லை. எனவே நாம் எல்லா தளங்களிலும் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார்.