திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியைச் சேர்ந்த லயஸ்ரீ என்ற சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு இரவு நேரங்களில் கால்நடைகளால் விபத்து ஏற்படுகிறது என்றும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். இரவு நேரங்களில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஒளிரும் காதணி வில்லைகளை கால்நடைகளுக்கு அணிவிக்கலாம் என மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை எழுதிய மாணவியை தற்போது முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இரவு நேரங்களில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து பற்றியும் அதை தடுப்பதற்கான வழிமுறை குறித்து மாணவி அருமையாக கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த மாணவி படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மாணவியை பாராட்டி  கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.