தமிழகத்தில் அரசு ஊழியர்கள் எந்தெந்த நிகழ்விற்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் எத்தனை நாட்கள் விடுமுறை எடுக்கலாம் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா ஆகியவற்றால் தனிமைப்படுத்த நேரிட்டால் அதிகபட்சம் 21 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்றும் வீட்டில் யாருக்காவது தொற்று நோய் ஏற்பட்டு இருந்தால் அல்லது ஊழியருக்கு தொற்று நோய் ஏற்பட்டால் அதிகபட்சம் 21 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அம்மை மட்டும் தட்டம்மை போன்ற பரவ க்கூடிய தாள் ஏழு நாட்கள் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் ஏற்பட்டால் ஏழு முதல் 10 நாட்கள் வரையும், பிளேக் நோய்க்கு பத்து நாட்கள் வரையும், ரேபிஸ் நோய்க்கு பத்து நாள் வரையும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். மேலும் புற்றுநோய் மருத்துவத்திற்கு 10 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழக அரசு இது போன்ற பல விடுப்பு குறித்தான ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.