தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.