ஊழியர்கள் சம்பள உயர்வு, வேலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வேலைபார்க்கும் நிறுவனங்களிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறுவது இயல்பு. இந்நிலையில் ஊழியர் பணி இடம் மாறுகையில் வருங்கால வைப்பு நிதியின் கணக்குகளை புது நிறுவனங்கள் உடன் இணைப்பதில் கவனம் செலுத்தவேண்டும். இல்லையெனில் அதுவே அதிக வரிகளை செலுத்த வழிவகுத்துவிடுகிறது. வருங்கால வைப்பு நிதியானது அரசாங்கம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் செயல்படுத்தப்படும் கட்டாய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நீங்கள் நிறுவனம் மாறும்போது, உங்களுடைய UAN எண் கொண்டு புது நிறுவனம் வேறு ஒரு புதிய கணக்கை தொடங்கி அதில் பணத்தை செலுத்துவர். பழைய PF கணக்குடன் கண்டிப்பாக உங்களின் புது கணக்கை இணைப்பது அவசியமாக இருக்கிறது.