தமிழ் சினிமாவில் ரஜினியுடன் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக் இந்தியில் பிரபல நடிகராக உள்ளார். இவர் மீது அவருடைய மனைவி அலியா தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுபற்றி போலீஸ் நிலையத்திலும் புகாரளித்துள்ளார். இந்நிலையில் என்னையும் தனது குழந்தைகளையும் வீட்டிலிருந்து நவாசுதீன் வெளியேற்றிவிட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்

அதோடு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தன்னிடம் வெறும் 81 ரூபாய் மட்டுமே இருக்கிறது. 2 குழந்தைகளுடன் எங்கு செல்வது என தெரியவில்லை. பெற்ற தந்தையே இப்படி செய்ததை என் மகளால் ஜீரணிக்க முடியவில்லை. என்னையும், குழந்தைகளையும் நடுத் தெருவில் விட்ட நவாசுதீன் சித்திக்கை சும்மா விட மாட்டேன்” என வீடியோவில் கூறியுள்ளார்.