தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், தேர்தல் பத்திரங்கள் #ElectoralBonds அரசியலமைப்பிற்கு முரணானது என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது. இது வெளிப்படையான தேர்தல் செயல்முறை மற்றும் அமைப்பின் நேர்மையை உறுதி செய்யும். இந்த தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகம் மற்றும் சமநிலையை மீட்டெடுத்துள்ளது. தேர்தல் அமைப்பின் மீது சாமானியர்களின் நம்பிக்கையையும் இது உறுதி செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.