தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் பலரும் படித்து வரும் நிலையில் அவர்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டும் அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் http://ssp.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளோர் பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.