செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.எஸ். இளங்கோவன், அடிப்படையில் ஆளுநருக்கு சில சிக்கல்கள் இருக்கின்றது. கொஞ்சம் அவருக்கு மைண்ட் சரியில்லை என்று நினைக்கிறேன்.

அவரை பொறுத்த வரைக்கும்  இஷ்டத்துக்கு என்னென்னமோ செய்றாரு. அவர் பாட்டுக்கு பூணூல் போட்டு விடுறாரு…  இன்னும் கொஞ்ச நாள் போனா அருணா கயிறு கட்டி விடுவாரு. இன்னும் கொஞ்ச நாள் போனா யாருக்காவது தாலி கூட கட்டுவாரு.

மூளை சரியில்லாத ஒரு ஆளாக இருக்கின்ற காரணத்தால் குற்றாலத்தில் போய் ஒரு மாசம் இருக்கணும். நாலு நாள்ல எவ்வளவு மாற்றங்கள் என்று பாருங்கள். அவர் ஒப்புதல் அதெல்லாம் விடுங்க… முதல்ல ஆளுநர் மனிதனாக மாற வேண்டும்.  அவருக்கு மெண்டல் ட்ரீட்மென்ட் கொடுக்கணும் என தெரிவித்தார்.