தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப பதிவேற்றத்திற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது விண்ணப்பங்களை இணைய வழியில் செலுத்துவதற்கு டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொள்வதற்கு டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 9 ஆகிய இரண்டு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.