போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏடிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு போலீஸ் ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்துவதால் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்திருப்பதாக கூறிய அவர், தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருப்பதை அனைத்து பிரிவு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.