மாவீரன் படத்தில் வரக்கூடிய வாய்ஸ் ஓவர் யாருடையது என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

இன்னும் 7 நாட்களில் திரைக்கு வரவுள்ள மாவீரன் திரைப்படம் தற்போது அதிக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு காரணம் அதனுடைய வித்தியாசமான ட்ரெய்லர் காட்சிகள் தான். ட்ரெய்லரில் கதாநாயகன் அவ்வபோது வானத்தை பார்ப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அது ஏன் ? அந்த காட்சியில் என்ன நிகழப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகம் எழ, அதற்கான பதில் ஒன்றையும்  படக்குழுவே அளித்தது. அதன்படி,

அக்காட்சிகளில் ஏதோ குரல் ஒன்று கதாநாயகனுக்கு கேட்பது போலவும், அந்த குரல் கமலஹாசன் அல்லது ரஜினிகாந்த் அவர்களால் கொடுக்கப்பட இருந்ததாகவும், இருவரிடமும் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் அது நடக்காமல் போக, தற்போது படத்தில் இருக்கும் குரல் தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கும் என தெரிவித்திருந்தது.

இதையடுத்து நெட்டிசன்கள் அது யாருடைய குரலாக இருக்கும் என தேட ஆரம்பிக்க,  விஜய் சேதுபதி, சிம்பு, தனுஷ் ஆகிய மூவரில் ஒருவர் தான் கண்டிப்பாக வாய்ஸ் ஓவர் கொடுத்து இருப்பார்கள் என யூகித்து அதனை பகிர்ந்து வருகின்றனர். இதில் தனுஷ் ரசிகர்கள்  அது கட்டாயம் தனுஷ் அவர்களின் குரலாக இருப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக ஓவர் கான்ஃபிடன்ஸில் சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.