ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி குமாரி. இவரது மகள் சைதன்யா நெல்லூரில் இருக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு சைதன்யாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு சைதன்யாவை அவரது கணவர் குடும்பத்தினர் அதிக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

அவர்கள் கேட்ட பணம் நகையை கொடுத்த போதிலும் கார் வேண்டும் என மேலும் துன்புறுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில் தனது தாய் ஜோதிகுமாரிக்கு போன் செய்த சைதன்யா கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதால் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோதி குமாரி மகளின் தோழிகளுக்கு தகவலை தெரிவிக்க அவர்கள் விரைந்து சென்று ரூம் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாத காரணத்தினால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சைதன்யா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சைதன்யா  ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.