டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை திடீரென சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் டெல்லி போலீசார் ட்ரோனை தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை ட்ரோன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் ட்ரோன் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.