நீர், நிலம் மற்றும் விவசாயம் காப்போம் கூட்டம் ஒன்று பா.ம.க சார்பில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டிருந்த போது நான் டீசண்டாக பேசிக் கொண்டிருப்பேன் என நினைக்காதீர்கள் எனச் சொல்லி வேட்டியை மடித்து கட்டி ஆவேசத்துடன் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டேன் என்றும் தனியாருக்கு விற்கப்பட உள்ள எல்ஐசி-க்கு நிலத்தை ஏன் வாங்கித் தருகிறீர்கள் என்றும் கடலூரை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் ஆவேசத்துடன் பேசி உள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.