கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி-6 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 6 ஆம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்து இருக்கிறார். அதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.