செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரே கையெழுத்தில் நீட்டை  விலக்கி விடுவோம் என்று சொன்னார்கள். இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு. நீதிமன்ற தீர்ப்பு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.   மக்களை ஏமாற்றுகின்ற விதமாக…  திமுக இன்றைக்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.

2021 நிலைமையில் இவங்க எந்த வாக்குறுதி சொல்லாமல் இருந்தாலும்…  நல்ல முறையில் மக்கள் அவர்களுக்கு ஆட்சியை கொடுத்திருப்பாங்க.  திமுக உடைய குணாதிசயமே மக்களை ஏமாற்றுவதுதான். ஆட்சி பொறுப்புக்கு வருவதற்காக எந்தவிதமான நடவடிக்கைகளிலும்  ஈடுபடுவார்கள். அது போல அவருடைய தவறான நடவடிக்கைகள் ”திமுக”  திருந்தாத தீய சக்தி என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

காவேரி குறுக்கு அணை கட்டுவதற்கு…  மேகதாது அணை கட்டுவதை  எதிர்த்து  முதல் முதலாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எப்ப எல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கர்நாடகாவுக்கு தைரியம் வந்துவிடும் . தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க பார்ப்பார்கள்.  ஆனால் மத்திய அரசு அதில் உறுதியாக இருந்து,  தமிழ்நாட்டு மக்களின் நியாயமான உரிமையை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் என் உங்களுடைய கோரிக்கை என தெரிவித்தார்.