செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பார்ட்-2 -வை பொறுத்த வரைக்கும்…  பினாமி பேருல அவங்க வாங்கி இருக்க கூடிய லேண்ட், பினாமி பேருல வாங்கி இருக்க கூடிய நிறுவனங்கள், இது எல்லாம் பார்ட்-2 ல இருக்கு… எப்படி இருந்தாலும் பாதையாத்திரைக்கு முன்பாக இதை செய்யணும்.

அதே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பினாமிகளுடைய பெயர். பல  பினாமிகள் முக்கியமான பொறுப்பில் இருக்காங்க. தமிழக முழுவதும் இருக்காங்க…  இவர்கள் எல்லாம்  சமுதாயத்தில் தன்னை பெரிய மனிதர்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை எப்படி எடுத்துட்டு போகணும்னு ஆலோசனை பண்ணிட்டு இருக்கோம். எப்படி இருந்தாலும்….   

டிஎம்கே பார்ட்-2 பைல்ஸை எந்த ரூபத்துல ரிலீஸ் பண்ணனும்னு முடிவை  நாங்கள் எடுத்துக்கிறோம். அது நிச்சயமாக நடக்கும்,  அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பாதயாத்திரை நடக்க நடக்க பார்ட் 3,  பார்ட் 4 வரும். எல்லாமே பத்திரிகையாளர் சந்திப்பு முலமாக நடக்கும் என்று சொல்ல முடியாது.  ஏன்னா…  பினாமினுடைய பெயர்களை பப்ளிக்கா வெளியிடுவதா ?  இதுவரைக்கும் இந்தியாவில் யாருமே பப்ளிக்கா வெளியிடவில்லை என தெரிவித்தார்.