மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து ஆறு மற்றும் ஏழாம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி 11,355 குடிநீர் பாட்டில்கள், 50 பிரட் பாக்கெட்டுகள், 2812 பிஸ்கட் பாக்கெட்டுகள், 100 போர்வைகள், 100 நாப்கின், 100 லெக்கின்ஸ், மஞ்சள் தூள், சாம்பார் தூள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டார்.