தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ராமச்சந்திரபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த பகுதியில் இருக்கும் 5 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து கட்டில்கள், நாற்காலிகள் மேல் அமர்ந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மழை நீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்ற முடிந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் மழைநீர் வழித்தடங்கள் சரியாக அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.