கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் சார்பாக சிறிய ரக பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று பள்ளி முடிந்ததும் 30 மாணவர்களுடன் சின்னசேலத்தில் இருந்து பள்ளி பேருந்து சமத்துவபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் பேருந்தில் இருந்த மாணவர்களை மீட்டனர். கை, கால், நெற்றி ஆகிய இடங்களில் லேசான காயமடைந்த ஆறு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.