மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகிறது.

இதனால் கொசுத்தலை ஆற்றலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு வளையங்கள் எதுவும் இல்லாததால் அந்த பகுதியில் பொதுமக்களும் வாலிபர்களும் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.