தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மதுபான கடைகள், மது கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான கடைகள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி இல்லை என கூறியுள்ளார்.