தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அச்சன்புதூர் வடகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் வடகரை கீழ்ப்படாகை, அச்சன்புதூர் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? குறைபாடுகள் ஏதாவது இருக்கிறதா? என கேட்டறிந்தார். மேலும் டெங்கு தடுப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டுள்ளார்.