சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் தான் கோவை சரக டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டார். இந்நிலையில் கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் கடந்த இரண்டு தினங்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்துள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.